திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (17ம்தேதி) மாலை 3 மணியளவில் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுஸில் எனது தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், பொன் ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.