உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். உத்திரமேரூரில் ஸ்ரீஆனந்தவள்ளி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளன்று ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, லட்சுமி பூஜை, கோ பூஜை, ஆண்டாள் திருப்பாவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.இதையடுத்து, 3ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.