புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கசாப் என்பவன் மட்டும் சிக்கினான். அவர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தூக்கில் போடப்பட்டான். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தலைவன் ஹபீஸ் சையத் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஹபீஸ் சையத்தின் மகனும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத குழுவின் முக்கிய தலைவனுமான ஹபீஸ் தல்ஹா சையத்தை ஒன்றிய அரசு தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.