சேலத்தில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மயக்கினார் மாணவியின் நிர்வாண போட்டோவை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பறிப்பு: போலி ஐஏஎஸ் அதிகாரி போக்சோவில் கைது

சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடியை சேர்ந்தவர் சசிகுமார்(23). எம்பிஏ பட்டதாரி. இவரது உறவினர்கள் பலர் சேலத்தில் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சசிகுமார் சேலம் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவினர் வீட்டைச்சேர்ந்த 9வது படிக்கும் 15 வயது சிறுமியிடம் சசிகுமார், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஐதராபாத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். பின்னர் பெற்றோருக்கு தெரியாமல் காரில் ஏற்றிச்சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியை காதல் வயப்படுத்திய சசிகுமார், நிர்வாண போட்டோ எடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அவரும் தனது நிர்வாண போட்டோவை சிறுமிக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் அந்த சிறுமியும் நிர்வாண படம் அனுப்பியுள்ளார். அந்த படத்தை வைத்து  சிறுமியை மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் சமூக வலைதலங்களில் புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியே ரூ.1.70 லட்சம் வரை மாணவியிடம் பறித்துள்ளார். இந்த பணத்தை அச்சிறுமி அவரது தாத்தா வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து கொடுத்துள்ளார்.

வீட்டில் வைத்திருந்த பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா விசாரித்து வந்தபோது, அச்சிறுமியின் செல்போனுக்கு மேலும் ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் என சசிகுமார் மிரட்டல் மெசேஜ் விடுத்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்தபோதுதான் சிறுமியை மிரட்டி சசிகுமார் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுமி நேற்றுமுன்தினம் சேலம் டவுன் மகளிர் போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார், போலி ஐஏஎஸ் அதிகாரியான சசிகுமாரை போக்சோ, மிரட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிந்து கைது செய்தனர். பின்னர்  சசிகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: