டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். பெட்ரோல், டீசல், பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.