ஆப்பிரிக்கா காடுகளில் ராஜமவுலி படப்பிடிப்பு

ஐதராபாத்: திரைக்கு வந்த ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது. தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு படத்தை முடித்துள்ள மகேஷ் பாபு, அடுத்து இப்படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமான இதற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஆப்பிரிக்கா காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. மகேஷ் பாபு படத்தை முடித்த பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: