புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2022 - 23ம் ஆண்டுக்கான உதேச மின்கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து உதேச கட்டணம், நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவித்து இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.