சண்டிகர்: சண்டிகரை பஞ்சாப்புடன் இணைக்கும்படி வலியுறுத்தி, பஞ்சாப் சட்டபேரவை சிறப்பு கூட்டத்தில் முதலவர் மான் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கூட்டு தலைநகரமாகவும், யூனியன் பிரதேசமாகவும் உள்ள சண்டிகரை, இந்த இருமாநில அரசுகளும் நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில், யூனியன் பிரதேசம் என்ற வகையில் சண்டிகரில் ஒன்றிய அரசின் பணியாளர் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தார். இதனால், பஞ்சாப் அரசு அதிர்ச்சி அடைந்தது.இந்நிலையில், சண்டிகரை பஞ்சாப்புடன் உடனடியாக இணைக்கும்படி வலியுறுத்திய முதல்வர் பகவந்த் மான், சட்டபேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை நேற்று கூட்டினார்.