விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது குறித்து அறிவுரை வழங்கினார். விழுப்புரம் சரக காவல்துறை ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நேற்று நடந்தது. வடக்கு மண்டல ஐஜி பிரேம்ஆனந்த் சின்ஹா, டிஐஜி பாண்டியன், எஸ்பிக்கள் (விழுப்புரம்) ஸ்ரீநாதா, (கடலூர்) சக்தி கணேசன், (கள்ளக்குறிச்சி) செல்வகுமார் மற்றும் 3 மாவட்ட ஏஎஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பரிசு வழங்கி கவுரவித்தார்.