சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தேவி (29). இவரது கணவர் விபத்தில் இறந்துவிட்டார். 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் வெங்கடாசலம் என்பவருக்கும் தேவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெங்கடாசலத்தின் பெற்றோரின் சம்மதமின்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் எருமாப்பாளையத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் வெங்கடாசலம், மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, கணவரிடம் சென்று கேட்டார். அப்போது அவர் தனக்கு கடன் பிரச்னை இருப்பதாகவும், பெற்றோரிடம் சென்று ரூ.15 லட்சம் வாங்கிவருமாறும் கூறியதாக கூறப்படுகிறது.