மும்பை: சினிமா பிரபலம் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கங்கனாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று அந்தேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சினிமா பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பாலிவுட் நடிகை கங்கனா மீது கிரிமினல் அவதூறு புகார் ஒன்றை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு பெருநகர மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கங்கனா உள்ளார். படப்பிடிப்பிற்காக அவர் அடிக்கடி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றுவருவார். தொடர்ந்து அவர் பயணம் செல்வதால், அவரால் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் தாமதங்கள் ஏற்படுகிறது.