தானே: தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் ரயில் முன் குதித்த இளைஞரை கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உதல்வாடி ரயில் நிலையத்தில் காவலர் ரிஷிகேஷ்மான் நேற்று பிற்பகல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே மதுரை விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரயில் அதிவேகமாக இளைஞரை நெருங்கி வருவதை கண்ட காவலர், தண்டவாளத்தில் குதித்து இளைஞர் மீது பாய்ந்து அவரை இழுத்து காப்பாற்றினார்.