கும்பகோணம் மெட்டல்ஸ் பட்டறையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு-இருவர் கைது, ஆட்டோ, பைப்புகள் பறிமுதல்

கும்பகோணம் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதி கும்பேஸ்வரர் திருமஞ்சனம் படித்துறையில் உள்ள ஒரு மெட்டல்ஸ் பட்டறையில் கடந்த 12ம் தேதி இரவு பட்டறைக்கு வெளியே அடுக்கி வைத்திருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக கடையின் உரிமையாளர் வளையாபதி (65) கொடுத்த புகாரின் பேரில் எஸ்பி ரவளிப்பிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில், கும்பகோணம் உட்கோட்ட டிஎஸ்பி அசோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர், கீர்த்திவாசன், எஸ்எஸ்ஐ ராஜா, தலைமை காவலர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட கும்பகோணம் மூப்பகோவில் ஏரகரம் வழி நடப்பை சேர்ந்த மார்ட்டின் மகன் அமர்நாத் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் நிஷாந்த் (22) ஆகியோரை பிடித்து அவர்களிடமிருந்து திருடுபோன பொருட்களை மீட்டனர்.

திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் திருவிடைமருதூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories: