ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 4 படகுகளில் 76 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். வருவாய், காவல் மற்றும் புலனாய்வு துறையினர் கச்சத்தீவு செல்லும் பயணிகள், படகு ஊழியர்களின் ஆவணங்கள், உடமைகள் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வேர்கொட்டு பாதிரியார் தேவசகாயம் தலைமையில் பாதிரியார்கள், மீனவர்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 76 பேர் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.