உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற தனிப்பிரிவு போலீசார், ஏ.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்துக்கல்யாணி வீட்டில் சோதனை செய்தனர். இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.