வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (50). இவர் தெள்ளார் வணிக வளாகத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கடையை திறப்பதற்காக வந்தபோது கடை முகப்பில் இருந்த 2 கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. பூட்டு எதுவும் உடைக்காமல் இருந்ததால் கடையை திறந்த சரவணன் சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பாதுகாப்பு பெட்டக இரும்பு பீரோவை உடைத்து 65 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளை போயிருந்தது. புகாரின்படி தெள்ளார் போலீசார் வந்து விசாரித்தனர்.