சின்னாளபட்டி பள்ளியில் தேசிய ஹேண்ட் பால் போட்டி தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

சின்னாளபட்டி : அகில இந்தியளவிலான ஹேண்ட் பால் போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மார்ச் 20 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் ஆலோசனை பேரில் மாநில செயலாளர் சிவகுமார் தலைமையில் நடந்த இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து 32 மாவட்டங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

நடுவர்களாக குமரேசன், அமோக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், கண்ணன், ராதா ஆகியோர் செயல்பட்டனர். இங்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஜெய்ப்பூரில் நடக்கும் தேசிய அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்பர்.

Related Stories: