திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுக்கு சமீபத்தில் எச்ஆர்டிஎஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரியாக வேலை கிடைத்தது. கடந்த வாரம் அந்தப் பணியில் அவர் சேர்ந்தார். ஆனால் மறுநாளே அவரை பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து சொப்னா கூறியது: இப்போது ஏற்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் தான் காரணமாகும்.