பெங்களூரு:பெங்களூரில் 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 21-51 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்சிடம் படுதோல்வி அடைந்தது. பெங்கால் அணியில் மனீந்தர் சிங் 14 புள்ளிகளும், முகமது நபி பாக்ஷ் 13 புள்ளிகளும் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வியாகும். மொத்தத்தில் தலைவாஸ் அணி 21 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 10 தோல்வி, 6 டை என்று 47 புள்ளிகளுடன் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது.