அகமதாபாத்: கடந்த 2008ல் நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரின் தண்டனை விவரம் நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் நகரில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 21 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 56 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டது.