கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய புதிய குடியிருப்பில் 400 ச.அடியில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுப்பேன்: 170வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் முத்தழகன் பிரசாரம்

சென்னை: சென்னை மாநகராட்சி 170வது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் முத்தழகன் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் வாக்குகளை கை சின்னத்துக்கு அளிப்பதாக உறுதி கூறி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு தெருக்களுக்கும் பிரச்சாரத்துக்கு அவர் செல்லும் போது, அங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்னைகள் என்னவென்று கேட்டு அதை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்து வாக்கு சேகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்நிலையில், இன்று காலை கோட்டூர்புரம் சூர்யா நகர் பகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசுகையில், ‘‘கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் ஒவ்வொரு வீடும் 250 சதுர அடியில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதை மாற்றி ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடியில் கட்டித் தர நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். இதை உறுதியாக நிறைவேற்றி காட்டுவேன்’’ என்று வாக்குறுதி அளித்து பேசினார்.

Related Stories: