தென்காசி: தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மகப்பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. கொடியை கைலாச பட்டர், முத்துக்கிருஷ்ணன் பட்டர், செந்தில் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் கோவில் மணியம் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ வேங்கடரமணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் இசக்கி, பாஜக மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், சங்கர சுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், அதிமுக சுப்புராஜ், கூட்டுறவு மாரிமுத்து, சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.