அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..!

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். அருணாச்சலப் பிரதேசத்தின் காமேக் செக்டாரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே அந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. அவ்வப்போது அருணாசல பிரதேச பகுதியில் இந்திய ராணுவத்தினர் வழக்கமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவார்கள். அதன் அடிப்படையில் கடந்த 6ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியின் ஈடுபட்டிருந்த போது பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மாமெங் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ  வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: