விஜயகாந்த் நடவடிக்கை தேமுதிக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் நீக்கம்

சென்னை: தேமுதிக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் முருகையன் பாபுவை நீக்கி விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக வழக்கறிஞர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.முருகையன்பாபு கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர் கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. தேமுதிக வழக்கறிஞர் அணி துணை செயலாளராக வி.டி.பாலாஜி (மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்) நியமிக்கப்படுகிறார்.

Related Stories: