புதுடெல்லி: டெல்லி வரும் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை அரசு எரிபொருள் வாங்குவதற்கு, இந்தியா சமீபத்தில் ரூ.3,700 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இந்நிலையில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘இன்று டெல்லி வரும் இலங்கை அமைச்சர் பெய்ரிஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.