பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டையில் 32 பேர் வேட்பு மனு தாக்கல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் நேற்று 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முடித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். காலை 10:30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் என்பதால் நண்பகலுக்கு மேல் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பள்ளிப்பட்டு பேரூராட்சி பொருத்தவரை காங்கிரஸ் அமமுக உட்பட 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: