இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடிக்க விரட்டிச் சென்றபோது பைக்குடன் மதுபாட்டில்களை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். பைக் மற்றும் அதில் இருந்த 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மதுபாட்டில்களை கடத்திவந்ததாக சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த குமாரி (55) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் கலால் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
The post புதுச்சேரியில் இருந்து கடத்திவந்த 2880 மதுபாட்டில் பறிமுதல் appeared first on Dinakaran.