திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம், பாக்குபேட்டை ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரண்குமார் (32). அதே பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகராக இருந்து வருகிறார். இவரது மனைவி பிரித்திகா (27), மகள் நிக்கிதா (4). நேற்று காலையில் வழக்கம் போல பூஜை முடிந்த பின் வீட்டுக்கு வந்தார் கிரண்குமார். பின்னர் சாப்பிட்டு விட்டு மனைவி, மகளுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை சேகரை பார்க்க கிரண்குமார் புறப்பட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். முன்பக்க கதவை திறக்க முயன்றபோது, உள்புறமாக பூட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்தார்.