நீலகிரி: ஊட்டிக்கு ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்தால் அபராதம் விதிக்க கலந்துபேசி முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டிலை தடுக்க கோரும் வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில் தடுப்பு நடவடிக்கை பற்றி நீலகிரி, கோவை ஆட்சியர்கள் பிப்ரவரி 3- க்குள் அறிக்கைதர ஆணையிட்டுள்ளது.