எஸ்சி, எஸ்டி மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை: பிப்.10 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், எஸ்சி, எஸ்டி மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை பெற, பிப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021-2022ம் கல்வியாண்டுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்க, கடந்த 6ம் தேதி இணையதளம் திறக்கப்பட்டு, 10.02.2022 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள மாணவர்கள், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, சாதி, வருமானம், மதிப்பெண் சான்றுகள், சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் பிப்ரவரி 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: