ரயில் மோதி பள்ளி மாணவன் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாப பலியானார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று காலை ஒரு சிறுவன் செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறுவன் மீது மோதியது. இதில், அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த கேசவன் என்பவரது மகன் தருண்(16) என தெரியவந்தது. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

Related Stories: