ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் எதிரில் கடந்த 3.11.2007ம் ஆண்டு உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நீதிமன்றம் திறக்கப்பட்டு 22 வருடங்களாக தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஊத்துக்கோட்டை நீதிமன்றத்திற்கு சொந்தமான அரசு கட்டிடம் வேண்டும் என ஊத்துக்கோட்டை வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் புதிய நீதிமன்றத்கான இடத்தையும், லச்சிவாக்கம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் உள்ள இடத்தையும் நேற்று ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா(பொறுப்பு) பார்வையிட்டார்.