கமுதி: கமுதி அருகே டிப்பர் லாரி மோதியதில் 56 செம்மறி ஆடுகள் பலியாகின. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியசாமி (45) மற்றும் நாகராஜ் (40). இவர்கள் செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு இரவில் கிடை அமர்த்துவதற்காக கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் காவடிபட்டி பகுதியில் இரவு 8 மணியளவில் ஆடுகளை ஓட்டி சென்றனர்.