டெல்லி: கொரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டாமென ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. பல மாநிலங்கள் கொரோனா பரிசோதனைகளை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. கொரோனா உறுதியானோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்புள்ளதால் பரிசோதனை அவசியமாகும் என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டிருக்கிறது.