பெரம்பூர் : புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த உத்திரகுமார் (31), கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை எம்.ஆர்.நகர் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, முகக்கவசம் அணியாமல் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி, முகக்கவசம் அணிந்து செல்லும்படி கூறினர்.