திருப்பூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (93). இவருக்கு மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து திருப்பூருக்கு வந்தார். வயது முதிர்வால், வேலைக்கு செல்லமுடியாமல் சாலை ஓரத்தில் வசித்து வருகிறார். கொரோனா தடுப்பூசி குறித்து அறிந்ததும் தானும் தடுப்பூசி செலுத்த முயன்றார். ஆனால், அவரிடம் ஆதார், வாக்காளர் அட்டை என எதுவும் இல்லை. இதனால், தடுப்பூசி செலுத்தமுடியாமல் பலமுறை ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.