துறையூர்: திருச்சி அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற லாரியை மறித்து பணம் கேட்டு மிரட்டி தாக்கிய இந்து சபா அமைப்பு நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையிலிருந்து எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடியில் சென்ற போது 2 காரில் வந்த 2 பேர் லாரியை தடுத்து நிறுத்தி, அகில பாரத இந்து சபா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு மாடுகள் ஏற்றி செல்வது குறித்து விசாரித்தனர். அதன் பின்னர் ரூ.10,000 தருமாறு கேட்டனர்.