உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே எதிரே வந்த வேன்மீது கார் மோதியதில், 3 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். 16 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணம் தாலுகா, குருவராஜப்பேட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு 13 பெண்கள், 3 ஆண்கள் புறப்பட்டனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், அதிகாலை 3 மணியளவில் உத்திரமேரூர் அருகே பெருநகர் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து எதிரே காஞ்சிபுரம் நோக்கி வந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.