லக்னோ: வளர்ச்சி பணிகள் செய்யா தவர்களை கிருஷ்ணர் தண்டிப்பார் என்று முதல்வர் யோகி தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், பாஜ எம்பி ஒருவர், வரும் சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் விரும்புகிறார் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘கிருஷ்ணர் தினமும் என் கனவில் வந்து என் தலைமையிலான ஆட்சியில் தான் ராமராஜ்ஜியம் அமையப்போகிறது என்று கூறுகிறார்’ என்றார்.
இந்நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய கருத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.