வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், பிளவக்கல் அணை, நெடுங்குளம், மகாராஜபுரம், மாத்துார், ரெங்கபாளையம், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூடப்பட்டிருந்த ராமசாமியாபுரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனை வேளாண் நேர்முக உதவியாளர் சங்கர நாராயணன் திறந்து வைத்தார்.