தமிழகம் முழுவதும் 21ம் தேதி கள் இறக்கும் போராட்டம்: நல்லசாமி பேட்டி

தஞ்சை: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ் மக்களின் உணவின் ஒரு பகுதியாக கள்ளும், பழைய சோறும் இருந்தது. அப்போது புற்றுநோய் உள்பட தொற்று நோய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. இந்த இரண்டும் இல்லாததால் தற்போது நோய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து விட்டது. எனவே நாளை தொடங்கப்பட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல் நாள் ஆளுநர் உரையில் கள்ளுக்கு தடை நீக்கம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதை அரசியல் சாசன சட்டத்தின்படி ஏற்று செயல்படுத்துவார்கள் என நம்புகிறோம். இது, பொய்த்து போனால் திட்டமிட்டபடி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் வரும் 21ம் தேதி முதல் கள் இறக்கி விற்கும் போராட்டம் நடத்தப்படும்.

Related Stories: