புதுடெல்லி: `லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகளை கொன்ற வழக்கில், குற்றவாளிகளை மோடி அரசு பாதுகாக்கிறது. அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வேண்டும்,’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ``லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகை வீடியோவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மோடி அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது. இதற்கு நாடு சாட்சியாகும்,’’ என்று கூறியுள்ளார்.