ஈரோடு: ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளிடம் 2 கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமைறைவாக உள்ள 11 பேரை தேடி வருகின்றனர். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை தருவதாக கூறி 2 கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அச்சங்கத்தின் நிர்வாகிகளான அதிமுக பிரமுகர்கள், அவர்களது மனைவிகள், மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சங்க பொருளாளர் வைரவேல் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேரும் தலைமறைவாகினர்.