திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் தேதி நள்ளிரவு வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்க வாசல் திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தரிசனத்திற்காக ஏற்கனவே ஆன்லைனில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனத்திற்கான டிக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி தரிசிக்க, முக்கிய பிரமுகர்கள் தங்களின் சிபாரிசு மற்றும் பரிந்துரை கடிதங்களை அனுப்ப வேண்டாம். மேலும், அறங்காவலர் குழு தலைவர் அலுவலகத்தில் 10 நாட்களுக்கு பரிந்துரை கடிதங்கள் வழங்கப்படாது.