ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் பேருந்தில் சென்றனர். அப்போது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த அடில் அகமது தர் என்ற தீவிரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டங்கள் வகுத்தவர்கள், உதவிகள் செய்தவர்களை பாதுகாப்பு படைகள் கடந்த 3 ஆண்டுகளாக வேட்டையாடி வந்தன. இதில், கடைசி குற்றவாளியான ஜெய்ஷ் அமைப்பின் முக்கிய தளபதி சமீர் தர் என்பவன் மட்டும் சிக்காமல் இருந்தான்.