சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை விஜயகாந்த் நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் வந்தார். மேலும் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். இந்த நிலையில் அவர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். தொடர்ந்து கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.