வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குமணன்தொழு, தங்கம்மாள்புரம், வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு ஆவின் நிர்வாகத்தின் மூலம் பால் குளிரூட்டும் மையங்கள் செயல்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை, அதிமுக ஆட்சிக்காலத்தில் முறையாக பராமரிக்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், பல இடங்களில் மைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக விவசாயிகளும், கரவைமாடு சங்க நிர்வாகிகளும் ஆவின் குளிரூட்டும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.