அதிமுக ஆட்சியில் அலங்கோலமான ஆவின்பால் குளிரூட்டும் மையங்கள் மீண்டும் திறக்கப்படுமா?: கடமலை மயிலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குமணன்தொழு, தங்கம்மாள்புரம், வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு ஆவின் நிர்வாகத்தின் மூலம் பால் குளிரூட்டும் மையங்கள் செயல்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை, அதிமுக ஆட்சிக்காலத்தில் முறையாக பராமரிக்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், பல இடங்களில் மைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக விவசாயிகளும், கரவைமாடு சங்க நிர்வாகிகளும் ஆவின் குளிரூட்டும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

அப்போதுதான் ஆவின் நிர்வாகத்தை பலப்படுத்தி வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அதிக பால் கொள்முதல் அனுப்புவதற்கு ஏதுவாக அமையும் என தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆவின்பால் அதிகாரிகளிடம் கேட்டபோது, திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஆவின் குளிரூட்டும் மையக் கட்டிடங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆவின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் பணிகளைத் தொடங்கி விடுவோம், என்றார்.

Related Stories: