பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு, சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ். இவர்கள் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு நடத்திய விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், பரமக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதன்படி ஆசிரியர்கள் ராமராஜ், ஆல்பர்ட் வளவன் பாபு ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.  இதில் ஆசிரியர் ராமராஜை கைது செய்தனர். தலைமறைவான ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை தேடி வருகின்றனர். இருவரையும் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: