ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு, சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ். இவர்கள் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு நடத்திய விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், பரமக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தார்.