சண்டிகர்: பஞ்சாபில் நடந்த சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களிலும், பாஜ 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் சண்டிகர் மாநகராட்சி தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மொத்தமுள்ள 35 வார்டுகளில் 14 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜ வேட்பாளர்கள் 12 வார்டுகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அகாலி தளத்தை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.