நெல்லை: திருநெல்வேலியின் பாரம்பரிய அடையாளமான தாமிரபரணி படித்துறை மற்றும் கல் மண்டபங்களை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற படித்துறை கதையாடல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தாமிரபரணி நதிக்கரையில் நீண்ட படித்துறை, குறுக்கு துறை கல்மண்டபத்தில் குழந்தைகளுக்கான கதையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலை பண்பாட்டு மன்றம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி மதியழகன் வேடங்கள் அணிந்து குழந்தைகளை குதூகலப்படுத்தினார். சிறுவர்களுக்கு, நீர்நிலைகளை எவ்வாறு பாதுகாப்பது என்றும், படித்துறையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியுள்ளார்.